Pages

Sunday 21 July 2013

பெண்ணீயம்



மனம் விரும்பும் தனிமை கூட கிடைப்பதில்லை
ஆழ்மன அடிவாரத்தில் கூடாரமிடும்
முகவரி இல்லா முகாரி ராகமொன்று
வெளிவர துடித்து அடங்கி வீழ்கிறது....

தனக்கென ஏதுமில்லா
எல்லாம் நிறைந்த வாழ்க்கை…
அறியாமலே வாழ்ந்து வீழ்வது
பிறந்த பிறப்பின் மேல் எழுதப்பட்ட சதி...

நாட்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
விடியலில் சுறுசுறுப்புக்கும் குறைவில்லை...
அழகாய் தான் தோன்றுகிறது வாழ்க்கை...

காலில் கட்டிய சக்கரமாய்,
தலைமை தாங்கும்
ராணுவ வீரனின் மனநிலை...
இங்கு நானின்றி ஓரணுவும் அசையாதென
மார்த்தட்டிக் கொள்கிறது...

உனக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை
ஆம், எனக்கு ஒன்றும் தெரியாது
என விடை காணும் மனம்....

சுதந்திரம் என்பது எதுவரை?
தாண்டி விட துடிக்கும் வேகத்தில்
அடிபட்டு வீழும் மனம்...
தடையாய் பிறர் கண்படா கண்ணாடி சுவர்....

அவளுக்கென்ன மகாராணி,
சொகுசு வாழ்க்கை என்பர்களுக்கு
எப்படி புரிய வைப்பது?
உள்ளுக்குள் தொலைத்துக்
கொண்டிருக்கும் தேடலை?

ஒவ்வொரு நாளின் விடியலும்
தொலைத்து விட்ட
குழந்தை மனமொன்றை தேடிக் கொண்டே,
பெண்ணீயம் மீண்டும் தன்
கூட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறது...

No comments:

Post a Comment