Pages

Tuesday 30 October 2012

படித்ததில் பிடித்தது- உறவுகள்.....


ஒரு நாள் ஒரு சிறு பெண்ணும் அவள் தந்தையும் ஒரு பாலத்தை கடக்கவேண்டிய கட்டாயம். தந்தையோ சற்று பயத்தோடு“செல்லமே, இந்த பாலம் கடக்கும் வரை என் கையை பற்றிக்கொண்டிரு, அப்பொழுதுதான் நீ ஆற்றில் விழாமல் இருப்பாய்” என்றார்.

சிறு பெண்ணோ “இல்லை தந்தையே, நீங்கள் என் கையை பற்றி கொள்ளுங்கள்” என்றாள்.

“இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்க போகிறது” என்றார் தந்தை குழப்பத்தோடு.

“பெரிய வித்தியாசம் இருக்கிறது தந்தையே” தொடர்ந்தாள் சிறுமி, “நான் உங்கள் கைகளை பற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் கையை நான் பயத்தில் விட்டுவிட வாய்பிருக்கிறது, ஆனால் நீங்கள் என் கையை பற்றியிருந்தாலோ எனக்கு எதை பற்றியும் பயமில்லை, ஏனெனில் எக்காரணம் கொண்டும் என் கையை நீங்கள் விட மாட்டீர்கள்”

இதுதான் உறவுகள்... உறவுகள் மேல் கொண்ட நம்பிக்கைகள்...

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது ஒட்டுதலல்ல, பிணைதல். எனவே நம்மை நேசிக்கும் நபர் நம் கைகளை பற்றி கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் அவர்கள் கைகளை பற்றிக் கொள்வோம்...


No comments:

Post a Comment