Pages

Tuesday 23 October 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 1)



1. உன் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்....

2. கோபமும் கண்ணீரும் உணர்வுகளின் சத்ரு. கோபத்தின் போது மவுனம் காப்பதும், கண்ணீரின் போது அமைதி காப்பதும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்....

3. நேரம் வரும் போது எல்லாம் கூடி வரும், ஆனால் அந்த "நேரத்தை" உருவாக்கும் முயற்சிகளில் நாம் தான் ஈடுபட வேண்டும்....

4. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று, வாழ்க்கையும் அப்படி தான், முடியும் வரை தெரிவதில்லை, வாழ்வது எப்படி என்று...

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை இல்லை, மற்றவர் மனதில் நீ வாழும் வரை ....

6. காலம் என்றும் நமக்காக காத்திருப்பதில்லை, காலத்தோடு நாம் தான் அனுசரித்து செல்ல வேண்டும்...

7. வாழ்க்கை - நீ வாழ்வது உன் கையில் தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? ....

8. முட்களும் கற்களும் நெருடி கொண்டே தான் இருக்கும், ஆனாலும் வாழ்க்கை அதன் பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்...

9. நண்பனேயானாலும் நம் மேல் அவருக்கான சுதந்திரம், நம் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்.....

10. சந்தோசம் என்பது உள்ளங்கை அளவு தான், ஆனால் அதையே பிறருடன் பகிர பகிர சுரபியாய் ஊற்றெடுக்கும்...

11. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும். அவற்றை நல்ல பாடமாக எடுத்து கொண்டு செயல்பட்டால் வெற்றியும் நிம்மதியும் நம் வசமாகும்...

12. சோதனைகளையும் வேதனைககளையும் கடந்து தான் நேர்மை புகழப்படும்...

13. நகைச்சுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை தருகிறது, ஆனால் வாழ்க்கையே நகைச்சுவையாய் போய் விட்டால் நம் மகிழ்ச்சியை அதுவே தொலைத்து விடுகிறது....

14. அன்னைக்கு ஆண் பால் பெண்பால் வேறுபாடு எதுவும் இல்லை...அன்பை பகிரும் யாவரும் அன்னையே....

15. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, உயிர் இல்லாத உடலைப் போன்றது...

16. கர்வம் என்பது நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு.....

17. ஆர்வமும் முயற்சியும் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.....

18. தனியறையில் தூங்கி கொண்டிருப்பது தனிமையல்ல, உறவுகள் மத்தியில் ஒரு நட்பு இல்லாதிருப்பதே தனிமை....

19. எவ்வளவு தான் ஒருவரிடம் நற்பண்புகள் இருந்தாலும் அவரின் கோபம் ஒரு நொடியில் அவற்றை தகுதி இழக்க செய்து விடும்....

20. இந்த உலகில் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைப்பவன் என்றும் முட்டாளாகவே இருப்பான்....

21. மனசாட்சி சொல்படி வாழ்பவன் என்றும் பயம் கொள்ள தேவையில்லை....

22. ஒருவரின் குறைகளை கூறி கொண்டே இருந்தால் பயனில்லை, அவர்களின் நிறைகளை கண்டுபிடித்து நட்பு பாராட்டுவதே மேன்மை...

23. துன்பங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும் .....

24. விடியல் என்பது தினமும் தான், ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நம்மிடம் தான் உள்ளது....

25. அன்பை பகிர்ந்து கொடுக்க கொடுக்க தான் அதிகமாகும்...

26. நமக்கான பாதை எதுவென்று தெரிந்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்...

27. சோம்பல் என்பது கிடைக்க வேண்டியவைகளையும் தடுத்து விடும்...

28. ஒரு சிறு புன்னகை பகைமையை விலக்கி வைக்கும்....

29. மரண படுக்கையில் கூட உன்னால் இயன்றதை செய்யலாம் உனக்குள் ஒரு ஆற்றல் இருந்தால்...

30. குடும்பம் என்பது காற்றடைத்த பலூன் போன்றது, அதிகமாக அழுத்தம் கொடுத்தாலும் வெடித்துவிடும், லூசில் விட்டாலும் காற்று போய் விடும்...

31. நேசம் வெளிப்படும்போதுதான் ஒருவன் மனிதனாகிறான்...

32. அதிகாரம் என்பது ஆணவத்தால் அமைந்து விட கூடாது, அன்பால் ஆளப்பட வேண்டும்....

33. சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவனுக்கு சிறந்த ஆசான்... அவனின் உண்மை பண்புகளை அது வெளிக்கொண்டு வரும்...

34. வாழ்க்கை என்பது வாழ்வது இல்லை, பிறர் மனதை அன்பால் ஆள்வது ....

35. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் தான் முடியும் என்பது அகம்பாவம்.....

36. ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்...

37. வாழ்வின் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதி தான் காதல்.... இருந்தும் முக்கியமானது.....

38. வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போவதல்ல, வாழ வைத்து பார்ப்பது ...

39. வெற்றியும் தோல்வியும் நம் மன உறுதியை பொறுத்தது....

40. முடியாது என்று ஒதுங்குவதை விட முயன்று பார்த்து தோற்பது மேல்....

41. நட்பின் மொழி வார்த்தைகளிலில்லை , அதன் அர்த்தங்களில் உள்ளது....

42. சொந்தங்களை பிரிக்க வல்லது கொடுக்கல் வாங்கல். கவனத்தோடு செயல் படாவிட்டால் உறவுகள் சிதறி விடும்...

43. மறதி என்பது துன்பத்தை மறக்க இயற்கை நமக்களித்த கொடை. அது மட்டும் இல்லாவிட்டால் உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்...

44. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் தெரிந்தால் மட்டுமே ஒருவருக்கு வாக்கு கொடுக்க வேண்டும்....

45. எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த துன்பத்தை எதிர்நோக்கும் தைரியம் இருந்தால் துன்பம் கண்ணுக்கு தெரிவதில்லை ....

46. அன்பும் நேசமும் இருவழி பாதையாக இருக்க வேண்டும்....

47. நாமே நம்மை கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டால் உலகம் நம் வசமாகும்....

48. பிடிவாதம் என்னும் வாதம் நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்.....

49. சட்டென்று தோன்றும் கோபம் சட்டென மகிழ்ச்சியை மறைத்து விடும் ....

50. ஒரு மனிதனை கவுரவமிக்கவனாக வாழ செய்வதில் கல்விக்கு பெரும் பங்கு உண்டு... 


3 comments: