Pages

Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Saturday, 10 November 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 2)

51. வீண் பிடிவாதங்களும் வறட்டு கவுரவங்களும் வாழ்வின் நிம்மதியை குலைத்து விடும்....

52. நம்பிக்கை என்னும் படகில் தான் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது. பயணம் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அதுவே காரணமாகிறது....

53. வெற்றி என்பது லட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது....

54. நம் அன்பானவர்களின் மேல் அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை வெளிக்காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்...

55. உரிமைகளும் அதிகாரங்களும் எடுத்துக் கொள்ளப்படும் போதுதான் காதலின் வலிமை புரியப்படுகிறது ....

56. அன்பும் கருணையும் நட்பை பெருக செய்யும் காரணிகளாகும்.....

57. ஒருவரின் மேல் நம்பிக்கை வரும் வரை காத்திருக்கலாம், ஆனால் நம்பிக்கை வந்தபின் அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது....

58. நேர்மையும் அன்புமே தலைமை பண்பை கட்டிக்காக்கும் காவலர்கள்....

59. கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அடைய வேண்டும் என்ற முயற்சியும் தான் ஒருவனை வெற்றி படிகளில் ஏற வைக்கும்...

60. தவறாக புரிந்து கொள்ளல் நம்மையறியாமல் தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்...

61. பொறுமையும் சகிப்பு தன்மையும் ஒருவன் மனதில் அமைதியை கொண்டு வருகிறது...

62. சுயசிந்தனை, திட்டமிடல், நேரம் தவறாமை - ஒருவரின் முன்னேற்றதிற்கு முக்கிய காரணிகள்....

63. விடாமுயர்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வின் வெற்றியின் இரகசியங்கள்...

64. ஒரு நோயாளியின் உற்ற நண்பன் மன தைரியம், உயிருக்கு உலை வைக்கும் எதிரி பயம்...

65. வாழ்வில் எதிர்மறையான விசயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால் விரக்தி என்ற வார்த்தை பயனில்லாமல் போய் விடும்...

66. ஒருவரை நம்பும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் சந்தேகப்படலாம், நம்பிய பின் எக்காலத்திலும் சந்தேகம் வேண்டாம், அது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு...

67. சுகமும் துக்கமும் நிறைந்த வாழ்க்கையில் சுகத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் துக்கம் மட்டுமே மிஞ்சும்....

68. வாழ்வில் வரும் சோதனைகளை புன்னகையோடு எதிர்கொள்வதே அவற்றை வெற்றிகொள்ள நாம் எடுத்து வைக்கும் முதல் படி...

69. ஒரு ஆணின் கல்வி செல்வத்தை பெருக்கும், ஒரு பெண்ணின் கல்வி கல்வியை பெருக்கும்....

70. மகிழ்வாய் சிரித்திருக்கும் மனிதரிடம் அவர் எதிரியேயானாலும் அவரெதிரில் குறை கூறல் கூறுபவருக்கு இழுக்கு....

71. நமது குறிக்கோளை நோக்கி நேர்கொண்ட பார்வையோடு அதற்கான செயலிலும் இறங்கி விட்டால் வெற்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும்....

72. உடலில் ஏற்படும் காயத்தை விட மனதில் ஏற்படும் காயம் நீண்ட நாள் ஆறா ரணமாய் வலிக்கும்... அந்த ரணம் வேண்டாம் என்றில்லாமல் ரணத்தை தாங்கி கொள்ளும் துணிச்சலை கொடு என்ற பிரார்த்தனை ரணத்தின் தன்மையை குறைக்கும்....

73. தவறுகள் செய்பவன் மனிதன், அவனை மன்னிப்பது மனிதம்.....

74. முக்கியத்துவம் என்பது அறிவு சார்ந்து, அன்பு சார்ந்து, உறவு சார்ந்து, நட்பு சார்ந்து இருக்க வேண்டுமே தவிர தனம் சார்ந்து இருக்க கூடாது....

75. அன்பு என்பது ஒரு வழி பாதையாக மட்டுமேயில்லாமல் இருவழி பாதையாக இருக்க வேண்டும்... கொடுக்கலும் வாங்கலும் சரி சமமாக இருந்தால் என்றும் அன்புக்கு குறைவில்லை...

76. வாழ்வின் வளர்ச்சி நம் உள்ளத்தின் மகிழ்ச்சியை பொறுத்தே அமைகிறது. புத்துணர்ச்சியோடு கூடிய காலை நாள் முழுவதும் மலர்ச்சியாய் இருக்க உதவுகிறது.

77. அலைபாயும் மனதும், சட்டென முடிவெடுக்கும் அவசரமும் எப்பொழுதும் நல்ல முடிவை தருவதில்லை.

78. மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப வளையும் நாணலாய் இசைந்து கொடுப்பது வாழ்வின் கட்டாயமாக்கப்படுகிறது. புரிந்து கொண்டு தனித்தன்மை மாறாமல் வாழ்வை ரசிக்க பழக வேண்டும்.

79. தீர்க்கவே முடியாத பிரச்சனை என்று தெரிந்து விட்டால் அதனை புறம தள்ளி வைத்துவிட்டு வாழ்வை தொடர்வதே சாலச்சிறந்தது.

80. ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே... பக்குவமாக அதிலிருந்து மீண்டு விட்டால் வாழ்வை கற்று விடலாம்.

81. அழகியல் என்பது அன்பால் உணரப்படுவது. அது ஆத்மாவின் தூய்மையை வெளிப்படுத்தும்.

82. மனதின் எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்பட்டு விட்டால் குற்ற உணர்வு குறைவதுடன் நல்ல எண்ணங்களை மனம் எண்ணத் துவங்கும்.

83. மனம் என்பது நம்மை ஆளும் கருவி. சரியான முறையில் இயக்கப்பட்டால் மட்டுமே சரியான விகிதாசாரத்தில் அது இயங்கும்.

84. அளவுக்கு அதிகமான அன்பு கூட பல நேர துன்பங்களுக்கு காரணக்கர்த்தாவாக இருக்கிறது.

85. வாழ்க்கை என்பது நீர்நிலை போல, சில சமயம் சலனமற்ற நதியாய் அமைதி காட்டும் அது பல நேரங்களில் காட்டாற்று வெள்ளமாய் ஆக்ரோஷம் காட்டும்.

87. அளவான தேவையான தூக்கம் உடலை பேணுவதுப் போல் அளவான தேவையான அன்பு நட்பை பலப்படுத்தும்.

88. பிறர் நிம்மதி கெடுத்து தன் நிம்மதி தேடும் மனிதர்களுக்கு மிருகம் என்ற அடைமொழி கூட ஏற்புடையதல்ல.

89. காயங்களை ஆற்றும் தகுதி மறதிக்கு உண்டென்றாலும் அன்புக்குரியவர்களின் நினைவு என்றும் மறக்கலாகாது.

90. காரணங்களே வேண்டாமல் அன்பை கொடுக்க வல்ல வலிமை நட்புக்கு மட்டுமே உண்டு.

91. அன்பானவர்களின் உணர்வுகள் அன்புக்குரியவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை.

92. கடந்துப் போன காயங்களை மறக்கச் செய்தலும், பசுமை நினைவுகளை அசைபோட வைத்தலும் காலத்தின் முக்கிய பணிகள்.... புரிந்துக் கொண்டு செயல்பட்டோமானால் என்றும் காலம் நம்மோடு கடந்து வரும்.

93. ஆவேசமும் அவசரமும் என்றும் அறிவுக்கு சத்ரு... இவை இரண்டையும் சற்று நேரத்துக்கு ஒத்தி வைத்தால் தானே வலிமையிழந்து நம்மை வலுப்படுத்தும்.

94. அன்பும் அறிவும் என்றும் அழியா பொக்கிசங்கள்... பாதுகாத்தல் நமது கடமை.

95. அன்பு - அது ஆழ்ந்த புன்னகையை மனதில் படர விடும் அற்புத ஆயுதம் .

96. எவ்வளவு பெரிய கோபத்தையும் அடக்கியாளும் சக்தி, ஒரு சிறிய புன்னகைக்கு உண்டு.

97. நிதானமும் தெளிவான சிந்தனையும் மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும்.

98. சில நேரங்களில் சுயநலமில்லா முடிவுகள் பயனற்று போய் விடுகின்றன... விவேகமும் சற்றே சுயநலம் சார்ந்த முடிவுகளே என்றும் வாழ்வின் மகிழ்ச்சியை நீடிக்க வைக்கும் காரணிகளாகும்.

99. நீர் இருக்கும் வரைதான் நீரூற்றுக்கு மதிப்பு. அதை போல் அன்பு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.... அன்பில்லாத மனிதன் விலங்கினத்தில் கூட சேர்க்க தகுதியில்லாதவன்.

100. வாழ்க்கையின் மிகப்பெரிய அடிப்படை தேவை அன்பு... பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த தெரியாத மனிதன் வாழ்க்கையின் பெரும்பகுதி நிம்மதியை இழக்கிறான்.


Tuesday, 23 October 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 1)



1. உன் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்....

2. கோபமும் கண்ணீரும் உணர்வுகளின் சத்ரு. கோபத்தின் போது மவுனம் காப்பதும், கண்ணீரின் போது அமைதி காப்பதும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்....

3. நேரம் வரும் போது எல்லாம் கூடி வரும், ஆனால் அந்த "நேரத்தை" உருவாக்கும் முயற்சிகளில் நாம் தான் ஈடுபட வேண்டும்....

4. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று, வாழ்க்கையும் அப்படி தான், முடியும் வரை தெரிவதில்லை, வாழ்வது எப்படி என்று...

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை இல்லை, மற்றவர் மனதில் நீ வாழும் வரை ....

6. காலம் என்றும் நமக்காக காத்திருப்பதில்லை, காலத்தோடு நாம் தான் அனுசரித்து செல்ல வேண்டும்...

7. வாழ்க்கை - நீ வாழ்வது உன் கையில் தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? ....

8. முட்களும் கற்களும் நெருடி கொண்டே தான் இருக்கும், ஆனாலும் வாழ்க்கை அதன் பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்...

9. நண்பனேயானாலும் நம் மேல் அவருக்கான சுதந்திரம், நம் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்.....

10. சந்தோசம் என்பது உள்ளங்கை அளவு தான், ஆனால் அதையே பிறருடன் பகிர பகிர சுரபியாய் ஊற்றெடுக்கும்...

11. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும். அவற்றை நல்ல பாடமாக எடுத்து கொண்டு செயல்பட்டால் வெற்றியும் நிம்மதியும் நம் வசமாகும்...

12. சோதனைகளையும் வேதனைககளையும் கடந்து தான் நேர்மை புகழப்படும்...

13. நகைச்சுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை தருகிறது, ஆனால் வாழ்க்கையே நகைச்சுவையாய் போய் விட்டால் நம் மகிழ்ச்சியை அதுவே தொலைத்து விடுகிறது....

14. அன்னைக்கு ஆண் பால் பெண்பால் வேறுபாடு எதுவும் இல்லை...அன்பை பகிரும் யாவரும் அன்னையே....

15. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, உயிர் இல்லாத உடலைப் போன்றது...

16. கர்வம் என்பது நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு.....

17. ஆர்வமும் முயற்சியும் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.....

18. தனியறையில் தூங்கி கொண்டிருப்பது தனிமையல்ல, உறவுகள் மத்தியில் ஒரு நட்பு இல்லாதிருப்பதே தனிமை....

19. எவ்வளவு தான் ஒருவரிடம் நற்பண்புகள் இருந்தாலும் அவரின் கோபம் ஒரு நொடியில் அவற்றை தகுதி இழக்க செய்து விடும்....

20. இந்த உலகில் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைப்பவன் என்றும் முட்டாளாகவே இருப்பான்....

21. மனசாட்சி சொல்படி வாழ்பவன் என்றும் பயம் கொள்ள தேவையில்லை....

22. ஒருவரின் குறைகளை கூறி கொண்டே இருந்தால் பயனில்லை, அவர்களின் நிறைகளை கண்டுபிடித்து நட்பு பாராட்டுவதே மேன்மை...

23. துன்பங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும் .....

24. விடியல் என்பது தினமும் தான், ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நம்மிடம் தான் உள்ளது....

25. அன்பை பகிர்ந்து கொடுக்க கொடுக்க தான் அதிகமாகும்...

26. நமக்கான பாதை எதுவென்று தெரிந்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்...

27. சோம்பல் என்பது கிடைக்க வேண்டியவைகளையும் தடுத்து விடும்...

28. ஒரு சிறு புன்னகை பகைமையை விலக்கி வைக்கும்....

29. மரண படுக்கையில் கூட உன்னால் இயன்றதை செய்யலாம் உனக்குள் ஒரு ஆற்றல் இருந்தால்...

30. குடும்பம் என்பது காற்றடைத்த பலூன் போன்றது, அதிகமாக அழுத்தம் கொடுத்தாலும் வெடித்துவிடும், லூசில் விட்டாலும் காற்று போய் விடும்...

31. நேசம் வெளிப்படும்போதுதான் ஒருவன் மனிதனாகிறான்...

32. அதிகாரம் என்பது ஆணவத்தால் அமைந்து விட கூடாது, அன்பால் ஆளப்பட வேண்டும்....

33. சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவனுக்கு சிறந்த ஆசான்... அவனின் உண்மை பண்புகளை அது வெளிக்கொண்டு வரும்...

34. வாழ்க்கை என்பது வாழ்வது இல்லை, பிறர் மனதை அன்பால் ஆள்வது ....

35. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் தான் முடியும் என்பது அகம்பாவம்.....

36. ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்...

37. வாழ்வின் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதி தான் காதல்.... இருந்தும் முக்கியமானது.....

38. வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போவதல்ல, வாழ வைத்து பார்ப்பது ...

39. வெற்றியும் தோல்வியும் நம் மன உறுதியை பொறுத்தது....

40. முடியாது என்று ஒதுங்குவதை விட முயன்று பார்த்து தோற்பது மேல்....

41. நட்பின் மொழி வார்த்தைகளிலில்லை , அதன் அர்த்தங்களில் உள்ளது....

42. சொந்தங்களை பிரிக்க வல்லது கொடுக்கல் வாங்கல். கவனத்தோடு செயல் படாவிட்டால் உறவுகள் சிதறி விடும்...

43. மறதி என்பது துன்பத்தை மறக்க இயற்கை நமக்களித்த கொடை. அது மட்டும் இல்லாவிட்டால் உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்...

44. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் தெரிந்தால் மட்டுமே ஒருவருக்கு வாக்கு கொடுக்க வேண்டும்....

45. எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த துன்பத்தை எதிர்நோக்கும் தைரியம் இருந்தால் துன்பம் கண்ணுக்கு தெரிவதில்லை ....

46. அன்பும் நேசமும் இருவழி பாதையாக இருக்க வேண்டும்....

47. நாமே நம்மை கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டால் உலகம் நம் வசமாகும்....

48. பிடிவாதம் என்னும் வாதம் நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்.....

49. சட்டென்று தோன்றும் கோபம் சட்டென மகிழ்ச்சியை மறைத்து விடும் ....

50. ஒரு மனிதனை கவுரவமிக்கவனாக வாழ செய்வதில் கல்விக்கு பெரும் பங்கு உண்டு...